கதை கதையாம் காரணமாம்

கா.... கா.... கா.....

காக்காவுக்கு சோறு வைக்கபோனேனா திடீர்ன்னு ஒரு காக்கா
என்னோட சுக துக்கமெல்லாம் கேக்க ஆளே இல்லியான்னு கரைஞ்சுகிட்டே இருந்துச்சு என்னடா காக்கா காக்கான்னுதானே கரையும் இது என்னடா புதுசா கரையுதுன்னு கிட்ட போய் பார்த்தா ஒரு காக்கா நிஜமாவே பொலம்பிட்டுத்தான் இருந்துச்சு...என்ன சிரிப்பு எனக்குத்தான் மிருக பாஷை தெரியும்ன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமே அப்புறமென்ன இளிப்பு வேண்டி கெடக்கு இளிப்பு முதல்ல என்ன நடந்துச்சுன்னு சொல்றத கேளுங்க சாமியோவ்....

அப்பிடியே அவர அமுக்கி ஒரு சேரைப்போட்டு உக்காரவச்சதும் அழுதுட்டார் ஏன்யா அழுவுறன்னு கேட்டா இம்புட்டு நாளா ஒருத்தருக்கு சேரா இருந்து இருந்து என் முதுகு உடைஞ்சதுதான் மிச்சம் இப்போ எனக்கும் ஒரு சேர் போட்டு உக்கார வச்சுருக்கீங்க ரொம்ப சந்தோசம்ன்னாரு...உங்க பேர் என்னன்னு கேட்டா "கா"னா புகழ் காக்கான்னாரு..


சரி ஏன்யா கரைஞ்சுகிட்டே இருக்கன்னு கேட்டா நான் என்ன நாக்குல போட்ட சக்கரையா கரையுறதுக்குன்னு ஒரு நக்கல் வேற...நாக்கே இல்லை உனக்கு இதுல நக்கல் வேற ஒழுக்கமா சொல்லவந்த விஷயத்தை சொல்லுங்கன்னதுதான் தாமதம் உடனே பொறிஞ்சு தள்ளிட்டாப்ல போன சென்மத்துல அப்பளமா பொறந்துருப்பார் போல..

நானே கருப்பா இருக்குறோம்ன்னு ரொம்ப வருத்தப்பட்டு இருந்தேன் போன வாரம் ஒரு வேலைக்கு (என்ன வேலைன்னெல்லாம் லாஜிக்கா கொஸ்டின் கேக்கப்படாது ஆமா ) அந்த இண்டெர்வியூ போனேனா அங்க கறுப்பு வெள்ளைல எடுத்த பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இருந்தா கொண்டுட்டு வான்னு சொன்னாய்ங்க எனக்கு ஒரே குழப்பமா போச்சு என்னடா நம்ம கறுப்பாத்தானே இருக்கோம் இவன் என்னடான்னா கறுப்பு வெள்ளையில எடுத்த பாஸ்போர்ட் போட்டோ இருந்தா எடுத்துட்டு வான்னு சொல்றான் ஏன் சொல்றான்னு யோசிச்சா ஒண்ணும் தோணலை அதனால வேலை கிடைக்காம போயிடுச்சு நானும் அந்த நாள்ல இருந்து யோசிச்சு யோசிச்சு பார்த்தேன் ம்ஹ்ஹும்...ஒரு வேளை நம்மளையும் நம்ம காலைக்கடன் கழிச்சதையும் ஒண்ணா சேர்த்து கேப்பாய்ங்க போல அப்பிடியா?அதானே என்னோட கறுப்புக்கு மேட்ச்சா வெள்ளையா இருக்கும்ன்னு கேட்டுச்சு எனக்கு அதை அப்பிடியே கொன்னே போட்ருலாம்ன்னு ஒரு வெறி....

அடுத்து ஒண்ணு நாங்க எல்லாரும் எல்லா நாட்டுலயும் ஒரே மொழி பேசறோம் நீங்க என்னடான்னா ஒவ்வொரு ஊருக்கும் ஒரு மொழி பேசுறீங்க விட்டா தெருவுக்கு ஒரு மொழி பேசுவீங்க போல...எங்க எல்லாருக்கும் ஒரே மொழி இருக்குறதாலதான் ஒற்றுமையா இருக்கோம் தெரியுமா? உங்களை மாதிரி எப்போ பார் அவன் என்னைய அடிச்சுட்டான் குத்திட்டான்னு நாங்க என்னிக்காவது அப்பிடி சொல்லியிருக்கோமா? ஈவன் நீங்க போடுற சோத்துல விஷம் கண்டு கலந்து வச்சுருக்கிங்களான்னு முதல்ல எங்கள்ல ஒருத்தர் தியாகி சாப்பிட்ட பிறகுதான் மீதியிருக்குற நாங்க எல்லாம் சாப்பிடுவோம்..தெரியுமான்னு கேட்டுச்சு எனக்கு நாக்கை பிடிங்கிகிடலாமான்னு இருந்துச்சு...

பொறவு நாங்க காலையில அலாரம் கூட இல்லாம கரெக்ட்டா ஆறுமணிக்கு எந்திரிச்சு நீங்க போடுற காலை சிற்றுண்டி முடிச்சுட்டு சுறுசுறுப்பா சுத்தி வந்து தலைவர் சிலையெல்லாம் ஒரு ரவுண்ட்ஸ் போய் செக்கப்ப் பண்ணிட்டு அசந்து கொஞ்சம் தூங்கலாம்ன்னு ஒரு அரச மரம் பார்த்து வந்து உக்கார்ந்தா அதுக்கு கீழ உங்க இனத்தை சேர்ந்த பெரியவாள் அந்த மேற்க்குதெருக்காரி ஒரு மாதிரியாமே இந்த கொன்னவாயன் அவள வச்சுருக்கானாமேன்னு உலக முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் பேசிட்டு இருக்காய்ங்க இப்போ சொல்லுங்க மரத்துக்கு கீழ இருக்குற மனுசனுங்க மேல ஏன் அசிங்கம் பண்ணிவிடுறோம்ன்னு தெரியுதா? அப்பிடின்னு கேட்டுச்சு எனக்கு நாக்கு வரல.....

ஆமா நீங்க மாடு , ஆடு,கோழி,புறா,பூனை,இதெல்லாம் வளர்க்கிறீர்களே எங்கள ஏன் வளர்க்குறதில்லைன்னு தெரியுமான்னு கேட்டுச்சு எனக்கு தெரியலைன்னேன் உடனே அது நீங்க உங்களுக்குள்ளே காக்கா பிடிச்சுக்குவீங்க ஆனா நிஜமான காக்கா எங்களை பிடிக்க முடியாதே வெவ்வெவ்வே...ன்னு சொல்லிட்டு பறந்து போய்டுச்சுங்க.....